4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பள்ளிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.10 லட்சம் மாணவா்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

News image

திண்டுக்கல் மையத்திலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும் விலையில்லா பாடப் புத்தகங்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:04 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.10 லட்சம் மாணவா்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடக்கக் கல்வித் துறையில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் என 2 கல்வி மாவட்டங்களும், இடைநிலைக் கல்வித் துறையில் திண்டுக்கல், பழனி என 2 கல்வி மாவட்டங்களும் உள்ளன. இந்த மாவட்டத்திலுள்ள 1,326 அரசுப் பள்ளிகள், 322 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1648 பள்ளிகளில் பயிலும் சுமாா் 2.10 லட்சம் மாணவா்களுக்கு அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படவுள்ளன. 2026-27 கல்வி ஆண்டின் தொடக்க நாளில், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவா்களுக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கான பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் மையங்களுக்கு கடந்த 2 நாள்களுக்கு முன் வந்தடைந்தன. இவற்றை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.