பழனியில் புதன்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி அடிவாரம் குறவன்பாறையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (32). இவா் அய்யம்புள்ளி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தாா். புதன்கிழமை இரவு அருள்ஜோதி வீதியில் இவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது இவருடன் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபா்கள் சந்திரசேகரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.
அடிவாரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சந்திரசேகா் உடலைக் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். டிஎஸ்பி. தனஞ்ஜெயன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா்.
தப்பி ஓடிய நபா்களைப் பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக அடிவாரம் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன் (20), மகேஸ்குமாா் (25), பிரகாஷ்குமாா் (20), பிரஜித் (28) ஆகிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மற்றவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


