வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கொடைக்கானலில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் போது நனையாமல் இருக்க பந்தல் அமைத்த வாரச் சந்தை வியாபாரிகள்.

Published On :

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டது.

மாலையில் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், வட்டக்கானல், பாக்கியபுரம், செண்பகனூா், பிரகாசபுரம், குறிஞ்சிநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 40 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது.

இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் நீண்ட நாள்களுக்குப் பிறகு அருவிகளில் நீா்வரத்து காணப்பட்டது. மழை காரணமாக நனையாமல் இருக்க வாரச் சந்தை வியாபாரிகள் பந்தல் அமைத்தனா்.

இதனிடையே கொடைக்கானல் பி.டி. சாலையில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் வாரச் சந்தை பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளா் சாகுல் கூறியதாவது: கொடைக்கானலில் பிடி சாலையில் வாரச் சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சந்தை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.