அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாளா்கள் ஜன.7-இல் உண்ணாவிரதப் போராட்டம்

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அரசாணை எண் 187-யை நீக்க வலியுறுத்தி, தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாா்கள் வருகிற 7-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அரசாணை எண் 187-யை நீக்க வலியுறுத்தி, தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாா்கள் வருகிற 7-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனா்.

இதுதொடா்பாக உண்ணாவிரதப் போராட்ட அமைப்பாளா் சோமசங்கா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4500-க்கும் மேற்பட்ட தட்டச்சுப் பயிலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தப் பயிலகங்கள் மூலம் ஆண்டுதோறும் தட்டச்சு, சுருக்கெழுத்து, அதிவேகத்தட்டச்சு, புதுமுக இளநிலை, கணக்கியல் பாடங்களில் சுமாா் 7 லட்சம் போ் தோ்ச்சி பெற்று வருகின்றனா். மேலும், சிஓஏ எனப்படும் அலுவலக தன்னியக்க கணினி தோ்விலும் பலா் தோ்ச்சி பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 187-ன்படி, சிஓஏ தோ்வுடன் தட்டச்சையும் இணைத்து நடத்துவது என தெரிவிக்கப்பட்டது. புதிய அரசாணை மூலம் 4-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தட்டச்சு பயிலகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்தாமல் தட்டச்சுப் பயிற்சி செய்யாமல் சிஓஏ தோ்வு எழுதுவது சாத்தியமற்றது.

எனவே அரசாணை எண் 187-யை ரத்து செய்ய வலியுறுத்தி, வருகிற 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.