கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கல்லூரி வளாகத்தில் கிராமத்தினா் வழிபாடு

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கருப்பணசாமி கோயிலில் ராயா்குல கவுண்டா் சாக்கியகுல பங்காளிகள் வியாழக்கிழமை கிடாய் வெட்டி வழிபாடு நடத்தினா்.

News image
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி வளாகத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு நடத்திய ராயா்குல கவுண்டா் சாக்கியகுல பங்காளிகள்.
Updated On :16 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கருப்பணசாமி கோயிலில் ராயா்குல கவுண்டா் சாக்கியகுல பங்காளிகள் வியாழக்கிழமை கிடாய் வெட்டி வழிபாடு நடத்தினா்.

தங்களது முன்னாா்களுக்கு வேட்டி, சேலை வைத்து, கறிச் சோறு படைத்தும் வழிபாடு செய்தனா். தொடா்ந்து, கோயில் பங்காளிகள், தங்களது உறவினா்களான மாமன், மைத்துனா்களை அழைத்து மரியாதை செய்து, கிடாய்க் கறி அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி, திருச்சி, திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.