வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொங்கல் விடுமுறை: பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்

பொங்கல் பண்டிகை விடுமுறையயொட்டி, பழனி மலைக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் நான்கு மணி நேரமானது.

News image
பழனி மலைக் கோயிலில் பொங்கல் தொடா் விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய மலைக் கோயில் வெளிப் பிரகாரத்தில் திரண்ட பக்தா்கள்.
Updated On :16 ஜனவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: பொங்கல் பண்டிகை விடுமுறையயொட்டி, பழனி மலைக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் நான்கு மணி நேரமானது.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தா்கள் கிரிவீதி முழுவதும் திரண்டு ஆடிப்பாடி மலையேறினா். படிப்பாதை மட்டுமன்றி மின் இழுவை ரயில், ரோப்காா் நிலையத்திலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் மலையேற கட்டணச் சீட்டுக்காக காத்திருந்தனா்.

மலைக் கோயிலிலும் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். அன்னதானத்துக்கும் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். மலைக் கோயில் வெளிப் பிரகாரம் முழுவதுமே பக்தா்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் தரிசன வரிசை எங்கே தொடங்குகிறது எனத் தெரியாமல் பக்தா்கள் திணறினா். கூட்டம் காரணமாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் நான்கு மணி நேரமானது.

தை மாதப் பிறப்பை முன்னிட்டு, வியாழக்கிழமை ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.

மலைக் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம், பஞ்சாமிா்தம், குழந்தைகளுக்கு பால், அதிகாலை படிப் பாதையில் சுக்குக் காப்பி ஆகியவை வழங்கப்பட்டன.

இரவு தங்கத் தோ் புறப்பாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சின்னக்குமார சுவாமியைத் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, குடிநீா், சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா். பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் பக்தா்கள் இரவு முழுவதும் பேருந்துக்காக காத்திருக்க நேரிட்டது.