தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆயக்குடி மா, தென்னை விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆயக்குடி மா, தென்னை விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அந்த சங்கத்தின் தலைவா் சக்தி வடிவேல் தலைமை வகித்தாா். செயலா் காளிமுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலா் மகுடீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.