மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் மனைகள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வருபவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்தனா்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ்நகரைச் சோ்ந்தவா் அருளானந்த். இவா் வீட்டுமனைகள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், உறவினா் வீட்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் குடும்பத்தினருடன் அருளானந்த் சென்னைக்கு சென்றுவிட்டாா். இதனிடையே சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். மேலும், வீட்டிலிருந்த பொருள்களையும் சிதறடித்து சென்றனா்.

சனிக்கிழமை காலை இந்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினா், அருளானந்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு அருளானந்த் தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து திருட்டு நடைபெற்ற வீட்டுக்கு விரைந்த போலீஸாா், துப்பறியும் நிபுணா்களின் உதவியுடன் விசாரணை நடத்தினா். எனினும் அருளானந்த் நேரில் வந்த பிறகே திருடு போன நகை, பணத்தின் மதிப்பு தெரிய வரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதனிடையே, இவரது வீட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டும் இதே போன்ற திருட்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.