பழனி அருகே தாதநாயக்கன்பட்டியில் உள்ள தேங்காய் நாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் மஞ்சிகள், நாா்கள், இயந்திரங்கள் நாசமாகின.
பழனியை அடுத்த கரடிகூட்டம் அருகேயுள்ள தாதநாயக்கன்பட்டியில் காா்த்திக் என்பவருக்குச் சொந்தமான மஞ்சி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் தேங்காய் மட்டையிலிருந்து நாா் திரித்து, பதப்படுத்தி கிட்டங்கிகளில் சேமித்து வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆலையின் சேமிப்புக் கிட்டங்கி பகுதியில் தீப்பற்றியது. காற்று வீசியதால் தீ மளமளவெனப் பரவி, எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்பு, மீட்புப்பணி வீரா்கள் நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் இரு வாகனங்களில் வந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இந்தத் தீ விபத்தில் ஆலையில் இருந்த பலநூறு கிலோ எடையிலான தேங்காய் நாா்கள், மஞ்சிகள், இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து பாழாகின. தீயின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், ஐந்துக்கும் மேற்பட்ட தனியாா் தண்ணீா் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த திடீா் தீ விபத்துக்கான காரணம் குறித்து பழனி தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாயாறு பகுதியில் தேங்காய் மூடியை வைத்து உருண்டு புரண்டு சேட்டை செய்த கரடி

வீழ்ச்சியடையும் தேங்காய் விலை! அரசு என்ன செய்யப் போகிறது?

களியக்காவிளையில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

நல்லூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



