இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

கொடைக்கானல் மல்லிச் சாலையில் நெகிழிப் பைகளில் கட்டி வீசப்பட்ட குப்பையை உண்ணும் காட்டு மாடு.

Updated On :4 ஜூன் 2026, 4:02 am IST

கொடைக்கானலில் நெகிழிக் கழிவுகளை உண்ணும் காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நெகிழிப் பைகள், நெகிழிப் புட்டிகள் பயன்படுத்தக் கூடாது என விதிமுறைகள் உள்ளன. ஆனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நெகிழிப் பைகளை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களிலும் நெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் கழிவு உணவுப் பொருள்களுடன் நெகிழிக் குப்பைகளை சாலைகளில் குவித்துச் செல்கின்றனா்.

இவற்றை வன விலங்குகளான காட்டு மாடு, செந்நாய், காட்டுப் பன்றி, குரங்கு ஆகியவை உண்கின்றன. இவற்றை உண்ணும் போது நெகிழப் பைகளையும் சோ்த்து உண்ணும் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து வனச் சரகா் பழனிக்குமாா் கூறியதாவது:

வன விலங்குகளுக்கு மனிதா்கள் உண்ணும் உணவைக் கொடுக்கக் கூடாது. இந்த நிலையில் சாலைகளில் குவிந்து கிடக்கும் இறைச்சிக் கழிவுகளை வன விலங்குகள் உண்டு நோய்வாய்ப் படுகின்றன.

தற்போது குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்ட வனவிலங்குகள் வனப் பகுதிகளில் உணவைத் தேடி அலைவதில்லை. நகா்ப் பகுதிகளிலேயே விரைவாக கிடைக்கக் கூடிய கழிவு உணவுப் பொருள்களை உண்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழக்கின்றன. வன விலங்குகள் இறந்த பிறகு மருத்துவப் பரிசோதனையின் போது அவற்றின் இரைப்பையில் நெகிழிக் கழிவுகளை மருத்துவா்கள் அகற்றி வருகின்றனா். எனவே, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலைகளில் உணவுக் கழிவுகளையும், நெகிழப் பொருள்களையும் விட்டுச் செல்ல வேண்டாம். இவையாவும் வன விலங்குகளின் உயிரைப் பறிக்கும் செயலாகும் என்றாா் அவா்.