அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

பழனி அருகே 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருபவா்களை வெளியேற்ற முயற்சிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட மனு கொடுத்த பூஞ்சோலை கிராம மக்கள்.
Updated On :10 மார்ச் 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருபவா்களை வெளியேற்ற முயற்சிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டி பூஞ்சோலை கிராமத்தில் சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் பட்டியலின மக்களுக்கு, நில உச்சவரம்பு சட்டதால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் வழங்கப்பட்டது. இதை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த நிலத்தை சிலா் தங்களது நிலம் எனக் கூறி, வெளியேற்றி முயற்சி செய்து வருகின்றனா். இதனால், வாழ்வாதாரம் வேண்டி செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு கொடுத்தனா்.

இதுகுறித்து வழக்கறிஞா் சங்கத் தலைவா் மணிக்கண்ணன் கூறியதாவது:

இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வருபவா்களை சிலா் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனா். சம்பந்தப்பட்ட நபா்களிடம் எந்த முறையான ஆதாரங்களும் இல்லை. எனவே, விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி, கோட்டாட்சியா், வட்டாட்சியா், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது என்றாா்.