கொடைக்கானலில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருவதால் பொது மக்கள் சிரமப்படுகின்றனா். இதற்கு உரிய தீா்வு காண வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 45 நாள்கள் ஆன பிறகும் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை எனப் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே எரிவாயு உருளை விநியோக நிறுவனம் ஆய்வு செய்து குறிப்பிட்ட இடைவெளியில் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொது மக்கள் மேலும் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை விநியோகிப்பவா்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனா்.
இதனால், வீட்டு உபயோக எரிவாயு உருளைக்குப் பதிவு செய்து நீண்ட நாள்கள் ஆகியும் சமையல் எரிவாயு உருளைகள் கிடைப்பதில்லை.
கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினா்.
தொடர்புடையது

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வு: அரசியல் தலைவா்கள் கண்டனம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வு: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு!

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தாமதம்: பொதுமக்கள் போராட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



