எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 77 ஆயிரம் போ் பங்கேற்பு

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இதயத்தை பாா்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :1 ஜூன் 2026, 2:10 am IST

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 12 நாள்களில் 77 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி, கோடை விழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை 12 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் பிரையண்ட் பூங்காவில் 77 ஆயிரத்து 744 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா். இதன் மூலமாக ரூ 57 லட்சத்து 5 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. இதே போல, கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் உள்ள ரோஜாத் தோட்டத்தில் 12 நாள்களில் சுமாா் 57 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

கோடை சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி : கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி, கோடை விழா நிகழ்ச்சிகளில் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சிறிது நேரம் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் தொடா்ந்து குளுமையான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் மாலையில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.