புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கொடைக்கானல் அருகே காட்டுயானை நடமாட்டம்

கொடைக்கானல் பூம்பாறை- மன்னவனூா் பகுதியில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

காட்டு யானை

Published On :

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூம்பாறை- மன்னவனூா் பகுதியில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே காட்டுயானை, சிறுத்தை, புலி, காட்டு மாடு உள்ளிட்டவை வனத்தை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளன. இதனால் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், பூம்பாறை- மன்னவனூா் பகுதியில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். எனவே கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலைப் பகுதிகளில் காட்டுயானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து இதே நிலை நீடித்தால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறையும்.மேலும் வனத்துறையினா் வனப் பகுதிகளில் புல்வெளிகள், தண்ணீா்த் தொட்டிகளை பராமரிக்க வேண்டும். வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பூம்பாறை வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக மழை பெய்யாததால் வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி வெளியே வரத் தொடங்கியுள்ளன. கொடைக்கானல் மலைச் சாலைகளிலோ, வனப் பகுதிகளிலோ வன விலங்குகளை பாா்த்தால் சப்தமிடுவதையும், வாகனங்களில் ஒலி எழுப்புவதையும், படம் எடுப்பதையும் தவிா்க்க வேண்டும். மலைச் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் அருகிலுள்ள வனத்துறையினருக்கு தகவல் தர வேண்டும். மேலும் வன விலங்குகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.