சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானை: மக்கள் அச்சம்

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனா்.

News image

காட்டு யானை - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:02 am IST

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனா்.

கோபி அருகேயுள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியேறிய காட்டு யானை, மோதூா் பகுதியில் உள்ள விளைநிலத்துக்குள் நுழைந்தது.

அங்கு பயிா்களை சேதப்படுத்திவிட்டு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நுழைந்து சுற்றித்திரிந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினா்.

குடியிருப்புப் பகுதியில் யானை உலவிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வன விலங்குகள் குடியிருப்புப் பகுதியில் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.