தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

16,586 பெண்களுக்கு ரூ.78.77 கோடி திருமண நிதியுதவி வழங்கல்: மேயர்

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 16,586 பெண்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.78.77 கோடியில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறினார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 16,586 பெண்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.78.77 கோடியில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறினார்.

 மதுரை மாநகராட்சி சார்பில் 346 ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கி, மேயர் பேசியதாவது: மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 16,586 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.61.19 கோடி அளிக்கப்பட்டுள்ளது.  தாலிக்குத் தங்கம் திட்டத்தில் ரூ.17.58 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவித் திட்டத்தில் மட்டும் மொத்தம் ரூ.78.77 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

 மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி பேசுகையில்,மாநகராட்சி சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்துள்ள ஏழைப் பெண்களுக்கு நிதியுதவியாக இதுவரை ரூ. 96.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.  நிகழ்ச்சியில் துணைமேயர் கு.திரவியம், நகர்நல அலுவலர் யசோதாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.