மதுரை சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை பகுதியில் கால்வாயில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க இரும்பு வேலி அமைக்க ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் புதன்கிழமை காலை ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவர் சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை பகுதியில் உள்ள அனுப்பானடி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மைப் பணியைப் பார்வையிட்டார். அப்போது கால்வாயில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில்
இருபுறமும் இரும்புக் கம்பி வேலி அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மாடிகளில் இருந்து கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்டறிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் ஆணையர் உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஆழ்துளைக்கிணறுகள், திருநகர் அண்ணா பூங்கா மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த ஆணையர், பூங்காவில் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்து அதைத் தோட்ட செடிகளுக்கு உரமாக்கவும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









