முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

கூடங்குளம் போராட்ட வழக்கில் கைதானவர் மதுரை சிறையில் உண்ணாவிரதம்

கூடங்குளம் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன், சேலம்-சென்னை எட்டுவழிச்சாலையை

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கூடங்குளம் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன், சேலம்-சென்னை எட்டுவழிச்சாலையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று சிறையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் முகிலன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் மதுரை மத்தியச்சிறையில் முகிலன் தனிமைப்படுத்தப்பட்டு தனியறையில் அடைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. 
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மத்தியச் சிறையில் புதன்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலையை மத்திய மாநில அரசுகள் கைவிடவேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்வதாக அரசு அறிவித்திருந்த 10 ஆண்டு சிறைத்தண்டனை முடித்த கைதிகள் அனைவரையும் காலதாமதம் இன்றி விடுவிக்க வேண்டும்.சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்காமல் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் அறிக்கை, மணல் கடத்தல் தொடர்பான ககன்தீப்சிங்பேடி அறிக்கை ஆகியவற்றின் மீது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யக்கூடாது.  மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை சிறை நிர்வாகத்திடம் மனுவாக அளித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.