மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ரூ.1.63 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக்கூட்டம் புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர் மு.வ.அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை தலைமையில் பல்கலைக்கழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்கலைக்கழகத்தின் உத்தேச வருவாய் (2018-19) ரூ.83.93 கோடி, உத்தேச செலவு 101.57 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பற்றாக்குறையாக ரூ.1.63 கோடியாக உள்ளது.
ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறியதாவது: காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி வரவு, செலவு விவரங்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. ரூ.1.63 கோடி பற்றாக்குறை உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஊதியமாக ரூ.46.7 கோடி செலவிடப்படுகிறது. துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.41 கோடி செலவிடப்படுகிறது. பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.12 கோடி செலவிடப்படும்.
ஆட்சிப் பேரவையில் கல்விப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டடங்கள், வெளி வளாக வகுப்புகள் திட்டம் மற்றும் தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது ஆகியவற்றுக்கும் ஆட்சிப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தமிழ் அருங்காட்சியகம் அமைக்க சிறப்புக் குழு அமைக்கும் முடிவை எடுக்க துணைவேந்தருக்கு அதிகாரம் அளித்து ஆட்சிப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஆட்சிக்குழுவுக்கு கல்வி மற்றும் ஆட்சிப் பேரவையிலிருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்தவேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைகளைத் தீர்க்கும் வகையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் பேராசிரியர் செல்வம், ஆங்கிலப் பேராசிரியர் செல்லையா, வரலாற்றுத்துறை பேராசிரியர் ராமு, இரண்டு டீன்கள், மன்னர் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரும் இடம் பெறவுள்ளனர் என்றார்.
கூட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலை கண்காட்சிகள் நடத்தியது, வெளிநாட்டு பல்கலைக்கழகம், தமிழ் அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஆகியவற்றுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பதிவாளர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

