இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

நல்லதங்காள் ஊருணியை சுத்தப்படுத்திய  மக்கள் நீதி மையம் கட்சியினர்

அவனியாபுரம் நல்லதங்காள் ஊருணியை மாநகராட்சி ஊழியர்களுடன் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சுத்தப்படுத்தினர். 

Updated On :5 நவம்பர் 2018, 8:02 am IST

அவனியாபுரம் நல்லதங்காள் ஊருணியை மாநகராட்சி ஊழியர்களுடன் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சுத்தப்படுத்தினர். 
அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் நல்லதங்காள் ஊருணி உள்ளது. இந்த ஊருணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் படுத்தப்படாமல், குப்பைகளால் மாசடைந்து சுற்றுப்புற சுகாதாரமின்றி இருந்தது. இதனால் துர்நாற்றம் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. 
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மாநகராட்சியினரிடம் ஊருணியை சுத்தப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியினர், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் சுமார் 3 டன் அளவிலான குப்பைகள் ஊருணியிலிருந்து அகற்றப்பட்டன. 
தூய்மைப் பணியில் மக்கள் நீதி மையம் கட்சி மேற்கு மாவட்ட செயலர் மணி, நிர்வாகிகள் 
கிருஷ்ணகுமார், சரவணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.