தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கட்டும் மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து

வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

Updated On :5 நவம்பர் 2018, 7:53 am IST

வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 
 இதுகுறித்து மதுரை ஆதீனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துலா மாதத்தில்தான் தீபாவளிப் பண்டிகை வருகிறது. துலாம் என்றால் தராசு என்பது பொருள். 
வாழ்க்கையில் லாப, நஷ்டம், இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும். அப்படிக் கருதுவோர் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கும். தீப ஒளி போல இன்பம் மிளிரும். 
 ஒருவரை ஒருவர் மதித்துப் பழகும் பண்பு வேண்டும். மூத்தவர்களை மதித்துப் போற்றும் பண்பு வேண்டும். 
துன்பத்தில் இருப்போருக்கு ஆதரவாக இருந்து அவர்கள் இன்பத்தில் சிரிக்க வழிகாட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.