திருமங்கலத்தில் வடமாநில பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஜியா. இவர் திருமங்கலம் கணபதி நகரில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காய்ச்சல் வந்ததாம். ரத்தப் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரஜியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து நகராட்சி சுகாதாரப் பிரிவினர் மற்றும் அரசு மருத்துவர்கள் கணபதி நகரில் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








