நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

மதுரை நகரில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Updated On :23 ஜனவரி 2019, 7:31 am IST

மதுரை நகரில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை  பாக்கியநாதபுரம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த ராமர் மகன் விஜய்(23). மதுரை காமராஜர் சாலை ஏ.ஜி.சுப்பராமன் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செந்தமிழ்செல்வம்(22). இவர்கள் இருவர் மீதும் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இருவரும் நகரில் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.