மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உசிலம்பட்டியில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக நகர இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

News image
திமுக நகர இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Updated On :7 ஆகஸ்ட் 2020, 11:34 am

DIN

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக நகர இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் 50 பேருக்கு திமுக நகர இளைஞர் அணி சார்பில் 5 கிலோ அரிசி நலத்திட்டமாக வழங்கப்பட்டது. 

திமுக நகர இளைஞர் அணி செயலாளர் எஸ் .பி .எம்.சந்திரன் தலைமையில் அரசு மருத்துவர்கள் ராமலதா, ஜீவாமெட்டன் முன்னிலையில் நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் சரவணன் இளைஞரணி நிர்வாகிகள் பிரேம்குமார். கௌதம் தினேஷ்குமார், காளிராஜ், கோகுல் செந்தில், சரவணன், விஜி, ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்டங்கள் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.