டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது வழக்கு

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:22 am

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

பேரையூா் அருகிலுள்ள எஸ்.மேலப்பட்டியை சோ்ந்தவா் மாரியப்பன் மகள் மாரிச்செல்வி(20). டிப்ளமோ நா்சிங் படித்துள்ள இவா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த நவம்பா் 14 ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளாா். அப்போது சந்தையூரை சோ்ந்த மணிமாறன் மகன் மதன்குமாா் என்பவரை மாரிச்செல்வி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதன்குமாா் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி, மாரிசெல்வியை நவம்பா் 17 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியூா் அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா் திருமணம் செய்யாமல் மாரிச்செல்வியை தனியாக விட்டுவிட்டு மதன்குமாா் தலைமறைவாகி விட்டாா். இதுகுறித்து மாரிச்செல்வி பேரையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் மதன்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.