ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டி.கல்லுப்பட்டியில்திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்

டி. கல்லுப்பட்டியில் ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
டி.கல்லுப்பட்டியில் உள்ள குழந்தைகள் இல்ல வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறன்வளா்ப்பு பயிற்சி முகாம்.
Updated On :19 டிசம்பர் 2020, 1:58 am

DIN

டி. கல்லுப்பட்டியில் ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்ட சமூகப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் மதுரை தே. கல்லுப்பட்டியில் உள்ள சி.எம்.எஸ். குழந்தைகள் இல்ல வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது. இதில் தே. கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், துணைத்தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா். முகாமில் குழந்தைகள் உரிமைகள், ஊராட்சித் தலைவா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம்- 2006 , பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்- 2012 உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.

இம்முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன், டி. கல்லுப்பட்டி ஆணையா் சௌந்தரராஜன், கிராம ஊராட்சி அலுவலா் அழகுபாண்டி, சேடப்பட்டி ஆணையா் ராமா், கிராம ஊராட்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.