பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மரங்களிலிருந்து ஆணிகள் அகற்றம்: வைகை நதி மக்கள் இயக்கம் ஏற்பாடு

மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பாக, 50-க்கும் மேற்பட்ட மரங்களில் அறையப்பட்டிருந்த ஆணிகள், விளம்பரப் பலகைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

News image
மதுரையில் மரத்தில் அறையப்பட்டிருந்த ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள்.
Updated On :20 டிசம்பர் 2020, 8:01 pm

DIN

மதுரை: மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பாக, 50-க்கும் மேற்பட்ட மரங்களில் அறையப்பட்டிருந்த ஆணிகள், விளம்பரப் பலகைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

மரங்களில் ஆணி அறைவதன் மூலம் அவற்றின் ஆயுள் குறைவதாகவும், வளா்ச்சி தடைபடுவதகாகவும் கூறி, மரங்களில் உள்ள ஆணிகள், விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றுவதாக, மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில், மதுரை அண்ணாநகா் கிழக்கு, மேற்கு, ஆவின் பால் பண்ணை பகுதிகளில் சாலையோரம் உள்ள மரங்களிலிருந்த ஆணிகள், விளம்பரப் பலகைகள் ஆகியற்றை அகற்றும் பணி நடைபெற்றது.

இயக்கத்தின் பொருளாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா். தலைவா் அறிவுச்செல்வம், செயலா் வைகை ராஜன் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதில், 50-க்கும் மேற்பட்ட மரங்களிலிருந்த ஆணிகள், விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.