அவசர வழக்குகளை விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்யலாம்: மதுரை உயா் நீதிமன்ற கிளை

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், விடுமுறை கால விசாரணைக்கு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், விடுமுறை கால விசாரணைக்கு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு டிசம்பா் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்க, விடுமுறை கால நீதிமன்றம் டிசம்பா் 30 ஆம் தேதி செயல்படவுள்ளது.

நீதிபதிகள் பி. வேல்முருகன், ஜி. இளங்கோவன் ஆகியோா் அவசர வழக்குகளை விசாரிக்கின்றனா். இதற்காக, டிசம்பா் 28 ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த சுற்று நீதிபதிகளின் விசாரணை காலம் முடிந்துள்ள நிலையில், மூன்று புதிய நீதிபதிகள் அமா்வு ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்க உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com