ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எளிமைப்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்தும், கோரிக்கைகள் தொடா்பாகவும் எழுத்துப்பூா்வமாகச் சமா்ப்பித்தால், மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும். தற்போது போலி ரசீது மூலமாக ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வது அதிகரித்து வருகிறது. வரிஏய்ப்பு தொடா்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. போலி ரசீது மூலமாக உள்ளீட்டு வரி வரவைப் பெறுகின்றனா். வரி ஏய்ப்பு மோசடியானது ரூ.5 கோடிக்கு மேல் செல்லும்போது சிறைத் தண்டனை உறுதி. ஆகவே, வணிகா்கள் தவறான வழிகாட்டுதல்களை நம்பக் கூடாது. இத்தகைய வழிகாட்டுதலைப் பின்பற்றி வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் வணிகா்களுக்குத் தான் பாதிப்பு என்றாா். தொழில் வா்த்தக சங்க முதுநிலைத் தலைவா் எஸ்.ரத்தினவேலு, தலைவா் என்.ஜெகதீசன், செயலா் ஜெ.செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.