இந்நிலையில், தமிழக முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது. இந்த பணியின்போது இறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜாராம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க வேண்டும். கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் பணி செய்ய விலக்கு அளிக்க வேண்டும்.