ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விஏஓ, கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்கக் கோரிக்கை

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்குமாறு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியு

News image
Updated On :14 ஜூலை 2020, 4:57 pm

DIN

மதுரை: கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்குமாறு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.சுரேஷ், வருவாய்த் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் பல்வேறு பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசின் உதவித் தொகை உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், தமிழக முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது. இந்த பணியின்போது இறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜாராம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க வேண்டும். கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் பணி செய்ய விலக்கு அளிக்க வேண்டும்.

பல மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டுக்கான முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தகுதிவாய்ந்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வு வழங்கவும்,

மாவட்ட மாறுதல் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.