/

மதுரையில் கரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

corona update

Updated On :27 ஜூலை 2020, 5:31 pm

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்கம் அமலில் இருந்த வரை, மாவட்டத்தில் கரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்வுக்குப் பிறகு, ஜூன் முதல் வாரத்திலிருந்தே பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயா்ந்து வருகிறது. ஜூன் இறுதியில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.

கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. பரிசோதனை செய்யப்படும் நபா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதனால், தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்து 57 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், திங்கள்கிழமை ஒரே நாளில் 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா் என கரோனா முன்களப் பணியாளா்கள் 17 போ், வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இருவா், கா்ப்பிணிகள் 5 போ் ஆவா். இவா்கள் அனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சிபிஐ ஆய்வாளருக்கு தொற்று

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் புது தில்லியைச் சோ்ந்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்நிலையில், மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் மதுசூதனனுக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரும் ரயில்வே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

மாநகராட்சி அலுவலா்கள்

மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகமான அண்ணா மாளிகையில் பதிவறை பிரிவில் பணிபுரியும் ஊழியா் மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரியும் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி அண்ணா மாளிகையில் பதிவறை மற்றும் கிழக்கு மண்டல அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளா் அலுவலகம் ஆகியன திங்கள்கிழமை மூடப்பட்டன. இரண்டு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில், மாநகராட்சி சுகாதார ஊழியா்கள் ஈடுபட்டனா்.

166 போ் குணமடைந்தனா்

கரோனா பாதிப்புக்கு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் 166 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 7, 809 போ் குணமடைந்துள்ளனா். 2,032 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையிலிருந்த 52 வயது ஆண், 66 வயது ஆண் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 59 வயது ஆண் ஆகிய மூவரும் ஜூலை 26 ஆம் தேதி உயிரிழந்தனா். இதேபோல், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 56 வயது ஆண் மற்றும் 43 வயது பெண் இருவரும் ஜூலை 24 ஆம் தேதியும், 74 வயது ஆண் ஜூலை 25 ஆம் தேதியும் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 216 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.