இதுதொடர்பாக தென்காசியைச் சோ்ந்த பாலம்மாள் என்பவா் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தில் உள்ள எங்கள் தோட்டத்தில் மின்வேலி அமைத்திருப்பதாகக் கூறி, எனது கணவா் அணைக்கரை முத்துவை வனத் துறையினா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு மயக்கமடைந்த எனது கணவரை, வனத் துறையினா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால், அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவா் வனத் துறையினரால் தாக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளாா்.