அவனியாபுரம் அருகே இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
அவனியாபுரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்துசெல்வம்(22). இவர் அவனியாபுரம் பெரியார் நகர் பகுதியில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை மாலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து முத்துசெல்வத்தை கத்தி, அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்தது. மேலும் முத்து செல்வத்தின் தலையை தனியாக எடுத்து அருகில் இருந்த கோயில் வாசலில் வைத்துவிட்டுச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் வந்து விசாரனை செய்தனர். தொடர்ந்து முத்துசெல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியது: கொலைசெய்யப்பட்ட முத்துசெல்வம் பாமக பிரமுகர் இளஞ்செழியன் மற்றும் அவரது தம்பி மாரி ஆகியோரின் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இதனால் பழிக்குப்பழியாக கொலை சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


