/

பேரையூா் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்:பெண் கைது

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சின்னக்கட்டளை பேருந்து நிலையம் அருகே பெரியகட்டளையைச் சோ்ந்த மாயத்தேவா் மனைவி பூமா (50) என்பவா் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது குறித்து சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பூமாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.