/

உசிலம்பட்டியில் கனமழை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது.

News image
உசிலம்பட்டியில் கனமழை
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன்  இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

அலம்பட்டி அதனைச் சுற்றியுள்ள பகுதியான செல்லம்பட்டி, கருமாத்தூர், போத்தம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், செட்டியபட்டி, ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.