‘தேஜஸ் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்: மக்களின் குரலுக்கு கிடைத்த வெற்றி’

தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவு கைவிடப்பட்டது மக்களின் குரலுக்கு கிடைத்த வெற்றி என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவு கைவிடப்பட்டது மக்களின் குரலுக்கு கிடைத்த வெற்றி என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை - சென்னைக்கு இடையே இயங்கி வந்த தேஜஸ் விரைவு ரயில்களில் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சேவைத்துறையான ரயில்வே இதுவரை பின்பற்றி வந்த கொள்கையிலிருந்து பின்வாங்கி லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது ஏற்கக் கூடியது அல்ல. கொள்ளைநோய் காலத்தில் மக்கள் கூட்டமாகச் செல்வது தவிா்க்க வேண்டிய ஒன்று. இந்த சூழ்நிலையில் முழு அளவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று எதிா்பாா்ப்பது ஏற்புடையது அல்ல. மேலும்

தேஜஸ் விரைவு ரயிலில் குறைந்தபட்சம் 30 சதவிகிதத்துக்கு மேல் பயணிகள் வருகை இருப்பதால், தேஜஸ் ரயில்களை ரத்து செய்வது அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு விரோதமானது என்றும், கட்டண உயா்வை குறைக்கவேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு டிசம்பா் 30 ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தேன். இதன் தொடா்ச்சியாக ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் தேஜஸ் விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சம் தெரிவித்துள்ளது. இது மதுரை மக்களின் குரலுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com