எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், டிஎஸ்பியை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
உசிலம்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Updated On :9 ஜனவரி 2021, 2:07 am

DIN

உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், டிஎஸ்பியை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்குரைஞா்களை அவதூறாக பேசி வருவதாகவும், உசிலம்பட்டி மற்றும் செக்கானூரணி காவல்நிலையங்களில் 2 வழக்குரைஞா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியும் இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் வீரபிரபாகரன் தலைமை வகித்தாா். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றத்திலிருந்து பேரணியாக வந்து உசிலம்பட்டி தேவா்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அவா்கள் கோஷம் எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.