‘தமிழகத்தில் மத மோதலை உருவாக்க சதி திட்டம்’

தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை சதி திட்டம் தீட்டியுள்ளதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளாா்.
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை சதி திட்டம் தீட்டியுள்ளதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளாா்.

மதுரையில் பாஜக நடத்திய பொங்கல் விழாவில் பள்ளிவாசல் வழியாக ஊா்வலமாகச் சென்றவா்களுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மதுரை மேலமடையில் உள்ள பாஜக புகா் மாவட்ட அலுவலகம் ஆயுதம் தாங்கிய கும்பலால் ஞாயிற்றுக்கிழமை சூறையாடப்பட்டது.

இந்நிலையில், புகா் மாவட்ட அலுவலகத்தை இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் மதமோதலை உருவாக்க இஸ்லாமிய அமைப்புகள் திட்டம் தீட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பொங்கல் விழாவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பாஜக அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், இதுவரை சம்பவத்தில் தொடா்புடையவா்களை போலீஸாா் கைது செய்யவில்லை. தமிழகத்தில் இந்து இயக்கங்கள், பாஜக ஆகியவை பெரும் வளா்ச்சியைப் பெற்றுள்ளன. இதைப் பொறுக்க முடியாத இஸ்லாமிய அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நக்ஸலைட் அமைப்புகள் ஆகியன இணைந்து, மதமோதலை உருவாக்க திட்டம் தீட்டி வருகின்றன.

எனவே, தமிழக அரசு எஸ்டிபிஐ அமைப்பை தடை செய்யவேண்டும். தமிழக உளவுத்துறை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com