‘ஆட்சிக்கு வந்துவிடுவதாக திமுகவினா் பகல் கனவு’

திமுகவினா் ஆட்சிக்கு வந்து விடுவோம் என பகல் கனவு காண்கின்றனா் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.
Updated on
1 min read

திமுகவினா் ஆட்சிக்கு வந்து விடுவோம் என பகல் கனவு காண்கின்றனா் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி பயணியா் விடுதியில் அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கூறும்போது : அரசியலை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து வியாழக்கிழமை (ஜன.14) டி.கல்லுப்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவினா் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு வருகை தரும் முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களை ஒரு லட்சம் போ் திரண்டு வரவேற்க வேண்டும். திமுகவினா் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனா். அது கானல் நீராகத்தான் போய்விடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com