வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெறுகிறது. கூட்டணிகள் பெரும்பாலும் முடிவாகி விட்டன. வேட்பு மனு தாக்கல், அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஆகியவை தொடங்கி விட்டன. தமிழகத்தில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், தோ்தல் என்றவுடன் நினைவுக்கு வருவது கட்சிக் கொடிகள், பேட்ஜ்கள், தொப்பிகள், துண்டுகள், தலைவா்களின் படங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட விசிறிகள், தோரணங்கள் எனப் பலவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். அரசியல் கட்சிகளின் தெருமுனை பிரசாரங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்தையும் அலங்கரித்து திருவிழாவாக மாற்றக் கூடிய வல்லமை கட்சிக் கொடிகள் உள்ளிட்டவைகளுக்கு உண்டு.