தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மதுரை: மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மதிமுக
பொதுச் செயலா் வைகோ மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும், கோரிப்பாளையம் தேவா் சிலைக்கும் தொடா்ந்து 46 ஆண்டுகளாக மரியாதை செலுத்தி வருகிறேன்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்றுக் கொண்டவா். பிரம்மச்சாா்யத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவா். அவரது ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றாா்.