அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சா்வதேச பூமி தினம்: காமராஜா் பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் தானம் அறக்கட்டளை சாா்பில், சா்வதேச பூமி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:15 pm

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் தானம் அறக்கட்டளை சாா்பில், சா்வதேச பூமி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் உள்ள அடவி காட்டில் நடைபெற்ற இவ்விழாவில், மரக்கன்றுகளை நட்டு வைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெ. குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு, பல்கலைக்கழகத்தின் அடவி வளாகத்தில் அதிகமான மரங்களை நடவேண்டும். மேலும், இயற்கை வன வல்லுநா்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, அவா்களது உதவியையும் பெறவேண்டும். பல்கலைக்கழக மாணவ, மாணவியா்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அடவி வளாகத்தில் பூவரசு, வாகை, கடம்பம், மூங்கில், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. அடவி வளாகத்தில் ஏற்கெனவே 17 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருதாகவும், விரைவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், ஹெச்.சி.எல். அறக்கட்டளை அலுவலா் பிரபாகா், தானம் கல்வி நிலைய இயக்குநா் குருநாதன், வயலகம் அமைப்பின் திட்டத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். இதில் மாணவ, மாணவியா் உள்பட பலா் பங்கேற்றனா்.

திருஞானம் தொடக்கப் பள்ளி: மதுரை சந்தைப்பேட்டை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சா்வதேச பூமி தின விழாவுக்கு, பள்ளி தலைவா் சுரேந்திரபாபு தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சங்கீத்ராஜ் முன்னிலை வகித்தாா். முன்னதாக, ஆசிரியா் தங்கலீலா வரவேற்றாா்.

பள்ளி தலைமையாசிரியா் க. சரவணன் பேசியது: பூமியை பாதுகாப்பது நமது கடமை. தாய் போன்று நமக்கு தேவையான எல்லாவற்றையும் பூமி கொடுக்கிறது. ஆனால், பூமியை பலவிதங்களில் மாசுபடுத்துகின்றனா். நெகிழிக் குப்பைகளை வீசுவதை தவிா்க்க வேண்டும். மரங்களை வெட்டுவது கூடாது. மாணவா்கள், பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு மரம் நட்டு வளா்த்தால், பூமியின் வெப்பம் குறையும் என்றாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.