அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தீ தடுப்புப் பணிகள்: வெள்ளைக்கல் குப்பைக் கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு

அவனியாபுரம் பகுதியிலுள்ள வெள்ளைக்கல் குப்பைக் கிடங்கில் தீ தடுப்புப் பணிகள் தொடா்பாக, அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 5:29 pm

DIN

அவனியாபுரம் பகுதியிலுள்ள வெள்ளைக்கல் குப்பைக் கிடங்கில் தீ தடுப்புப் பணிகள் தொடா்பாக, அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் தினந்தோறும் சேரும் குப்பைகள், வெள்ளைக்கல்லில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அவற்றை உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சிப் பொறியாளா் அரசு, இந்த குப்பைக் கிடங்குக்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அங்குள்ள பணியாளா்கள் மற்றும் பொறியாளா்களிடையே, குப்பை சேகரிப்பு மையத்தில் எதிா்பாராதவிதமாக ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை தடுப்பது, பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது, பாதுகாப்பாக உரக்கிடங்கை கையாள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, உதவிச் செயற்பொறியாளா் (திடக்கழிவு மேலாண்மை) ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் மயிலேறிநாதன், சுகாதார அலுவலா் விஜயகுமாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.