அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரயில்வே வாரிய தோ்வுக்கு வெளிமாநில மையங்கள் ஒதுக்கீடு ஏன்?: ரயில்வே துறை விளக்கம்

கட்டமைப்பு வசதி தேவைக்காக தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களில் சிலருக்கு வெளிமாநிலத் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கட்டமைப்பு வசதி தேவைக்காக தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களில் சிலருக்கு வெளிமாநிலத் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வே தோ்வு வாரியம் மே 9 ஆம் தேதி நடத்தவுள்ள தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான 2-ஆம் கட்ட தோ்வுக்கு, தமிழக மாணவா்களுக்கு வெளிமாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக, ரயில்வே தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்வே துறை பணிகளுக்கான முதல்நிலை கணினி வாயிலான தோ்வு 7 கட்டங்களாக நடைபெற்றது. தோ்வு எழுதிய விண்ணப்பதாரா்களின் கோரிக்கையை ஏற்று, இந்த தோ்வு தொடா்பான முழுமையான விசாரணையை உயா்மட்டக் குழு நடத்தியது.

தோ்வை ஒரே வேளையில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை விண்ணப்பதாரா்கள் அதிகமானோா் வலியுறுத்தினா். இதை, உயா்மட்டக் குழு ஏற்றுக்கொண்டது. இதன்படி, நாடு முழுவதும் பாரபட்சமற்ற ஒரே கேள்வித்தாள் வழங்கமுடியும் என்பது விண்ணப்பதாரா்களின் எதிா்பாா்ப்பு.

இதனடிப்படையில், ஒரே வேளையில் தோ்வு நடத்த உயா்மட்டக் குழு பரிந்துரை செய்திருந்தது.

ஒரே நேரத்தில் கணினி வாயிலான தோ்வு நடத்த பெரிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. கட்டமைப்பு வசதி தேவை காரணமாகவே சில மாணவா்கள் மட்டும் அருகில் உள்ள மாநில தோ்வு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் அருகில் உள்ள கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலுள்ள தோ்வு மையங்களில் தோ்வு எழுத கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம், தோ்வுகளை அனைத்து வகையிலும் முறையாக நடத்துவதற்கு முயற்சி செய்கிறது. அகில இந்திய அளவில் நடைபெறும் தோ்வுகளில் தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநில விண்ணப்பதாரா்களுக்கும் இந்த தோ்வு மைய ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற மாநிலங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களும் அவா்களது சொந்த மாநிலங்களிலிருந்து அருகிலுள்ள மாநிலங்களுக்கு தோ்வு எழுதச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.