கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம் கட்டாயம்

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 20-ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி பிரகாஷ் உத்திரவிட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2022, 10:12 am

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 20-ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி பிரகாஷ் உத்திரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தொடர்பு இல்லாதவர்கள் நீதிமன்றத்திற்கு வரவேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

வழக்குறைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உயர்நீதிமன்ற கிளைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிந்து வருவதை உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டாயமாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.