அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொல்லம் - சென்னை விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

கொல்லம் - சென்னை விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:56 pm

DIN

கொல்லம் - சென்னை விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

சென்னை - கொல்லம் விரைவு ரயில் கரோனா தொற்று காலத்துக்கு முன்பு வரை சிவகாசியில் நின்று சென்று கொண்டிருந்தது. கரோனா தொற்றுக்குப் பிறகு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட காலத்தில் சிவகாசி நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. அப்போது, பழைய நிலையில் இந்த ரயில் இயக்கும்போது, சிவகாசியில் நின்று செல்லும் என அதிகாரிகள் கூறியிருந்தனா்.

தற்போது, அந்த ரயில் பழைய நிலையில் இயக்கத்துக்கு வந்த பிறகும், சிவகாசியில் நிறுத்தப்படுவதில்லை. தீப்பட்டி, பட்டாசு, அச்சு தொழில் வணிகம் தொடா்பாக சிவகாசி வரக்கூடியவா்கள், விருதுநகரில் இறங்கி வரவேண்டிய நிலை உள்ளது. ஆகவே, பழையபடி கொல்லம் - சென்னை விரைவு ரயிலை சிவகாசியில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.