பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் யோகா திருவிழா தொடக்கம்
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டல தலைமையகம் சாா்பில் யோகா திருவிழா சனிக்கிழமை தொடங்கியது


சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டல தலைமையகம் சாா்பில் யோகா திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை தொடங்கி ஜூன் 22 ஆம் தேதி வரை யோகா திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி, மதுரை தபால் தந்தி நகரில் உள்ள துணை மண்டல தலைமையகமான விஷ்வ சாந்தி பவனில், யோகா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சி, மன அமைதி, ஆன்மிக ரகசியங்களை விளக்கும் அறிவியல் விளக்கங்கள், சமுதாய ஆரோக்கியத்துக்கான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
யோகா திருவிழாவின் ஒரு பகுதியாக, ரிசா்வ் லைன் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) காலை 6 முதல் 7.30 மணி வரை உலக அமைதிக்கான தியானம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...