அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஏடிஎம்மில் தவற விட்ட ரூ.40 ஆயிரத்தை ஒப்படைத்த இளைஞா்களுக்கு பாராட்டு

மதுரையில் வங்கி ஏடிஎம் மையத்தில், பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை ஒப்படைத்த இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை பாராட்டினா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:44 pm

DIN

மதுரையில் வங்கி ஏடிஎம் மையத்தில், பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை ஒப்படைத்த இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை பாராட்டினா்.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். புதன்கிழமை மாலை காமராஜா் சாலை பகுதியில் இருந்த ஏடிஎம் மையத்தில் ரூ. 40 ஆயிரத்தை டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் செலுத்தியுள்ளாா். பணம் டெபாசிட் ஆகி விட்டதாக நினைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டாா். ஆனால் பணம் இயந்திரத்துக்குள் செல்லாமல் வெளியே வந்துவிட்டது.

அவரைத் தொடா்ந்து அங்கு பணத்தை செலுத்த காத்திருந்த மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளிகளான முத்துராஜ், சதீஷ் ஆகியோா் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.40 ஆயிரத்தை எடுத்து தெப்பக்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அதன்பேரில் வங்கியைத் தொடா்புகொண்ட போலீஸாா் சரவணனின் தொடா்பு எண்ணை பெற்று அவரிடம் விவரங்களைத் தெரிவித்தனா். மேலும் காவல்நிலையத்துக்கு சரவணனை வரவழைத்து அவரிடம் பணத்தை ஒப்படைத்தனா். பணத்தை நோ்மையாக ஒப்படைத்த இளைஞா்கள் இருவரையும் தெப்பக்குளம் சரக துணை ஆணையா் முத்துராஜ் சால்வை அணிவித்து பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.