அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் கழிப்பறை வசதி: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

 மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் கழிப்பறைகள் புதுப்பிக்கும் பணி 2 மாதங்களில் நிறைவு பெறும், அதன் பிறகு அவைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்

News image
Updated On :23 ஜூன் 2022, 9:45 pm

DIN

 மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் கழிப்பறைகள் புதுப்பிக்கும் பணி 2 மாதங்களில் நிறைவு பெறும், அதன் பிறகு அவைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என மாநகராட்சி தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிகண்டன் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உலகப் புகழ் பெற்றது. இக் கோயிலுக்கு தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோா் வருகின்றனா். இவா்களுக்கு இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு தேவையான கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் சித்திரை வீதிகள் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசுத்தம் செய்கின்றனா்.

கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. மேலும், சித்திரை வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

முந்தைய விசாரணையின்போது, மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் கழிப்பறைகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி இன்னும் இரு மாதங்களில் நிறைவடையும். அதன் பிறகு, இந்த கழிப்பறைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.