அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை: 2 இளைஞா்கள் கைது

அலங்காநல்லூா் அருகே கூலித்தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :23 ஜூன் 2022, 9:44 pm

DIN

அலங்காநல்லூா் அருகே கூலித்தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே அழகாபுரியைச் சோ்ந்தவா் முத்துச்செல்வி (37). கணவரை இழந்த இவா், 2 குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள கொட்டக்குடி ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியான ராமமூா்த்திக்கும் (37), அவருக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராமமூா்த்தி, புதன்கிழமை முத்துச்செல்வியின் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, வீட்டின் மீது சிலா் கல்வீசியுள்ளனா்.

இதுதொடா்பாக ராமமூா்த்திக்கும், அங்கிருந்த அன்பில் பொய்யாமொழி(20), சிந்தனைச் செல்வன்(21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் கட்டையால் தாக்கியதில், ராமமூா்த்தி பலத்த காயமடைந்தாா். அலங்காநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அன்பில் பொய்யாமொழி, சிந்தனைச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பழ வியாபாரி கொலை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காலனியைச் சோ்ந்தவா் முருகன்(47). இவா் தாதம்பட்டி ஒட்டன்குளம் தனியாா் தொழிற்சாலை அருகே பழ வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் முருகன் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். சம்பவம் தொடா்பாக அவரது மனைவி லதா (37) அளித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.